சந்திராயன்-3 லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் – பிரதமர் அறிவிப்பு!

0
சந்திராயன்-3 லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயர் - பிரதமர் அறிவிப்பு!
சந்திராயன்-3 லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயர் - பிரதமர் அறிவிப்பு!
சந்திராயன்-3 லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் – பிரதமர் அறிவிப்பு!

இஸ்ரோவின் சந்திராயன்-3 விண்கலம் மூலம் நிலவில் லேண்டர் கால் பதித்த இடத்திற்கு சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி உரையாற்றி இருக்கிறார்.

பிரதமர் அறிவிப்பு:

உலக நாடுகளில் இதுவரை செய்யாத சாதனையாக சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பி விக்ரம் லேண்டரை இஸ்ரோ நிலவில் தரை இறக்கி இருக்கிறது. இது குறித்து பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா சென்ற அவர், இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூருவிற்கு வந்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், தற்போது உங்களுடன் நான் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

Follow our Instagram for more Latest Updates

தென் ஆப்பிரிக்கா சென்ற போது என் மனம் முழுவதும் உங்களுடன் இருந்தது. இந்தியாவிற்கு வந்ததும் உங்களை பார்க்க வேண்டும் என நான் நினைத்தேன். உங்களுக்கு சல்யூட் செய்ய நினைத்தேன். நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும். இமயம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களை இணைக்கின்ற பெயராக இது இருக்கும்.

ஜி-20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம் – செப். 8, 9 சுப்ரீம் கோர்ட் விடுமுறை!

இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட. சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. அவர்களுக்கான அர்ப்பணிப்பாக இது இருக்கும். மேலும் லேண்டர் நிலவில் கால் பதித்த ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும். அன்றைய தினம் விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் பேசினார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!