உச்சத்தை தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் மக்கள்!

0
உச்சத்தை தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் மக்கள்!
உச்சத்தை தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் மக்கள்!
உச்சத்தை தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 312 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தங்கம் விலை:

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்ந்தது. இதனால் தங்கத்தின் விலையானது திடீரென சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து ஜிஎஸ்டி வரியும் உயர்த்தபட்டது. இதன் விளைவாக தங்கம் விலை மேலும் அதிகரித்தது. இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேலும் திருமணத்திற்கு நகை வாங்குவோரும் பொருளாதார ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த நேரத்தில் பல்வேறு காரணங்களால் கடந்த ஓரு வார காலமாக தங்கம் விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை பாதிப்புகளுக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இதனையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 39,520க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல ஒரு கிராம் விலை ரூ.39 உயர்ந்து 4,940க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.68.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.68500 ஆக விற்பனையாகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!