தமிழகத்தில் பருவமழை பாதிப்புகளுக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு சேதாரங்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் மக்களுக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வெள்ள நிவாரணம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் சென்னை மாநகரில் மழையால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் இந்த ஆண்டு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் பருவமழை குறித்து சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
Exams Daily Mobile App Download
அதில் தமிழக முதல்வரின் உத்தரவின் படி துறை சார்ந்த அதிகாரிகள் முன்னதாகவே திட்டமிட்டு பருவ மழைக்கு தயாராக இருந்தனர். அதனால் பல மாநிலங்களில் பெரிய அளவில் சேதாரங்கள் ஏற்படவில்லை. மேலும் சென்னையில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் முன்னதாகவே அறிவித்து இருந்தார். அதன் காரணமாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடத்தி தற்போது தண்ணீர் தேங்காத நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் நாளை (நவ. 16) உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம் எச்சரிக்கை!
இரண்டு நாட்களுக்கு முன்னதாக முதல்வர் சென்னை சாலைகளின் நிலவரத்தை நேரில் வந்து ஆய்வு செய்தார். தற்போது கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் நேரில் பார்வையிட்டுள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி வீட்டிக்குள் மழைநீர் புகுந்தால் ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும் எனவும், குடிசை வீடுகள் இடிந்தால் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், பகுதியாக சேதம் ஏற்பட்டால் ரூ.4,100 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் கான்கரீட் வீடுகள் சேதம் அடைந்தால் ரூ.95 ஆயிரம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடு இறந்தால் ரூ.30 ஆயிரம், செம்மறி ஆடு இறந்தால் ரூ.3 ஆயிரம், எருதுக்கு ரூ.20 ஆயிரம், கோழிக்கு ரூ.100 வழங்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கனமழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், தென்னை மரம் சேதம் அடைந்தால் ரூ.18 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல், வாழை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் கடலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், சேலம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது 99 நிவாரண முகாம்களில் 52,751 பேர் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், பலர் வீடுகளில் இருந்து கொண்டு முகாமிற்கு வந்து சாப்பிடுவதாகவும் அவர்களுக்கு தேவையான கம்பளி, போர்வை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை (நவம்பர் 16) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.