கொஞ்சம் கவனமா இருங்க.. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இருக்கு கனமழை!

0
கொஞ்சம் கவனமா இருங்க.. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இருக்கு கனமழை!
கொஞ்சம் கவனமா இருங்க.. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இருக்கு கனமழை!
கொஞ்சம் கவனமா இருங்க.. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இருக்கு கனமழை!

டிசம்பர் 20ம் தேதியான இன்று முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலின் தாக்கத்தினால் கடுமையான மழையும், வேகமான காற்றும் வீசியது. புயல் கரையை கடந்த பின்னர் நேற்று தான் சற்று மிதமான வானிலை நிலவியது. இந்நிலையில், இன்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில்‌ இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்‌. இதனால், டிசம்பர் 20ம் தேதியான இன்று முதல், டிசம்பர் 24ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்குள் 50,000 விவசாயிகளுக்கு காத்திருக்கும் மற்றொரு பரிசு – அமைச்சரின் சூப்பரான தகவல்!!

Exams Daily Mobile App Download

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றானது அதிக வேகத்தில் வீச இருப்பதால், மீனவர்களுக்காக எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு மாதத்தில் தமிழகத்தில் மயிலாடுதுறையில் அதிக அளவு மழைபொழிவானது பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் குறைவான அளவு மழை பெய்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!