கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 819 ஆக அதிரடி உயர்வு – வெளியான ஷாக் நியூஸ்!

0
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 819 ஆக அதிரடி உயர்வு - வெளியான ஷாக் நியூஸ்!
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 819 ஆக அதிரடி உயர்வு – வெளியான ஷாக் நியூஸ்!

நாட்டில் பரவி வரும் கொரோனாவின் புதிய வகை திரிபான ஜேஎன்1 பிரிவு தற்போது 819 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கொரோனாவின் பாதிப்பு மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் ஜேஎன்1 வகை திரிபு பரவி வருகிறது. இந்தியாவின் 12 மாநிலங்களில் இந்த வகை திரிவு கண்டறியப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை பொறுத்தவரையில் ஜேஎன் 1 வகை பிரிவு மகாராஷ்டிராவில் 250 பேர், கர்நாடகாவில் 199 பேர், கேரளாவில் 148 பேர், கோவா 49 பேர், குஜராத் 36 பேர், ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் தலா 30 பேர், தமிழகம் மற்றும் தெலுங்கானா தலா 26 பேர், டெல்லி 21 பேர், ஒடிசா 3 பேர், ஹரியானா ஒரு நபர் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரத்தை பொருத்தவரையில் மொத்தம் 819 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆறு பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 3919 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 4.5 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு 5.3 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையின் வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!