என் அப்பா எனக்கு வேண்டும், ராதிகாவுடன் மோதிக்கொள்ளும் இனியா – அதிரடி திருப்பங்கள்!
குடும்பத்தை ராதிகா தான் இரண்டாக பிரிந்துவிட்டார் என ராதிகாவின் மீது பாக்கியாவின் குடும்பமே கொலை வெறியில் இருக்கின்றனர். இந்நிலையில், இனியாவும் ராதிகாவுடன் சென்று சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வரோ என ஈஸ்வரி பயந்து கொண்டிருக்கிறார். அதாவது, கோபியை பாக்கியா வீட்டை விட்டு விரட்டியதுமே கோபி எப்படியும் ராதிகாவை தான் சந்திக்க செல்வார் என ஈஸ்வரி துடித்து கொண்டிருந்தார். அதே போல கோபியும் நேராக ராதிகாவை சென்று சந்தித்தார். அதாவது, சொந்த மகனையே பாக்கியாவிற்காக வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள் என நடந்த அனைத்தையும் கூறுகிறார்.
எப்படியும், தன் மீது ராதிகா பாவம் பார்த்து ஏற்றுக்கொள்வார் என்று தான் கோபி நினைத்தார். ஆனால், ராதிகாவின் மனதிற்குள் சின்ன தடுமாற்றம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதாவது, கோபியை ஏற்றுக்கொள்ளலாமா என சிந்தித்து கொண்டே தான் இருக்கிறார். இதற்க்கு நடுவே கோபியை தேடிக்கொண்டு ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். அங்கே வந்து கோபியை எங்கே ஒழித்து வைத்திருக்கிறாய். அவனை வெளியே வர சொல் என அனைத்து அறையிலும் சென்று கோபியை தேடுகிறார்.
முழு மனதுடன் கோபியை ஏற்றுக் கொள்ளும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
Exams Daily Mobile App Download
பின்னர், உன்னால் தான் என் குடும்பம் இப்படி தவித்து கொண்டிருக்கிறது. நீ நல்லாவே இருக்கமாட்டாய் என சாபம் கொடுக்கிறார். பின்னர், ராதிகா கோவமாகி வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என ஈஸ்வரியை வெளியே துரத்துகிறார். பின்னர், இனியாவும் கோவத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். என் அப்பாவை மனசு மாற்றி நீங்கள் எங்கள் குடும்பத்தையே பிரித்துவிட்டிர்கள் என இனியா ராதிகாவிடம் கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்கு பிறகும் ராதிகா கோபியை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்