முழு மனதுடன் கோபியை ஏற்றுக் கொள்ளும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் கோபியும் விவாகரத்து வாங்கிவிட்ட நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் கோபியை ராதிகா ஏற்றுக் கொண்டு கதையில் வில்லியாக மாறும் காட்சிகள் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியல் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது கதைக்களம் முற்றிலுமாக மாறி இருக்கிறது. 25 ஆண்டு குடும்பம் நடத்திய கோபியும் பாக்கியாவும் தற்போது விவாகரத்து வாங்கி இருக்கின்றனர். அதனால் குடும்பமே நிம்மதி இல்லாமல் கவலையில் இருக்கிறது. மேலும் கோபி உடன் இனிமேல் ஒரே அறையில் இருக்கமாட்டேன் என பாக்கியா சொல்ல அதனால் வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார் கோபி. அவர் நேராக ராதிகா வீட்டிற்கு சென்று விவரத்தை சொல்கிறார்.
அவர் ராதிகா வீட்டிற்கு வந்ததை பார்த்த ராமமூர்த்தி ராதிகாவிடம் சென்று சண்டை போடுகிறார். அதனால் ராதிகாவுக்கு பயங்கரமாக கோவம் வருகிறது. மறுபக்கம் செழியனும், இனியாவும் பாக்கியா கோபியை வெளியே அனுப்பியதாக நினைத்து கோவத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் கோபி ராதிகா வீட்டிற்கு சென்றதை கேள்விப்பட்டு ஈஸ்வரி ராதிகாவிடம் சண்டை போடுகிறார். அப்போது ராதிகா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்பது போல பேச ராதிகாவுக்கு பயங்கரமாக கோவம் வருகிறது.
வீட்டில் பார்லர் தொடங்கிய ஐஸ்வர்யா, தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
இதனால் ராதிகாவுக்கு கோபியின் மீது உள்ள கோவம் போய் அனுதாபம் வருகிறது. இந்த சூழ்நிலையில் கோபி தங்குவதற்கு வீடு இல்லாமல் கஷ்டப்பட ராதிகா கோபிக்கு ஆதரவு தருகிறார். அதனால் இனி பாக்கியாவிற்கு ராதிகா தான் வில்லியாக இருக்க போகிறார். இனி வரும் எபிசோடுகளில் கதையில் பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதிகாவும் கோபியும் சேர்ந்தால் கதை சுவாரஸ்யமாக செல்லும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Worst serial😂🤣 pls stop serial😀🙏🏽