தமிழகத்தின் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று ( ஆகஸ்ட் 8) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் இன்று (ஆகஸ்ட் 8) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளநீர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழையானது வெளுத்து வாங்கி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கனமழை எதிரொலியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகா பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 8) விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இன்றும் குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
அதன் படி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 8) விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக 20க்கு மேற்பட்ட வீடுகள் சேதாரம் அடைந்த நிலையில், கனமழையால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, மின் விநியோகம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிப்பு அதிகமாக உள்ள 4 தாலுகாவிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.