தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மேற்கு திசை மாறுபாட்டின் காரணமாக சென்னை உட்பட வடகிழக்கு மாவட்டங்களில் வருகிற 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை:

இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்கள் தென்மேற்கு பருவமழை காலங்கள் ஆகும். இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. குறிப்பாக கேரளாவில் கடந்த மே மாதம் முதலே பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மஹாராஷ்டிரா மற்றும் மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் ஓரிரு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓரிரு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக அணைகளில் நீர் நிரம்பி வருவதால் வெள்ளம் அதிகரித்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கனமழை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் 4% அகவிலைப்படி

இந்தியாவில் மேற்குத்திசை மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை, மற்றும் ஏனைய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி கடலோர மாவட்டங்களில் ஆகஸ்ட் 9,10 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும். மேலும் ஆகஸ்ட் 11ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!