மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் 4% அகவிலைப்படி?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் 4% அகவிலைப்படி?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் 4% அகவிலைப்படி?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் 4% அகவிலைப்படி?

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படுகிறது. முன்னதாக மார்ச் மாதத்தில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீத உயர்வுடன் 34 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த உயர்வை லட்சக்கணக்கான ஊழியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அகவிலைப்படி:

கொரோனா வருகையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவில்லை. அதாவது அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு திருத்தி அறிவிக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதன்மூலம் 31%ல் இருந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34%ஆக அதிகரித்தது. இந்நிலையில் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக ஊழியர்கள் காத்துகொண்டு உள்ளனர். தற்போதைய சூழலில் மத்திய அரசு அகவிலைப்படியை 4% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மத்திய அரசு 4% அகவிலைப்படி உயர்வு அளிப்பதை உறுதி செய்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34% இருந்து 38% உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா மீண்டும் அசத்தல் – மும்முறை தாண்டுதலில் இன்று 2 பதக்கம்

அகவிலைப்படி உயர்வு என்பது அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அளவைப் பொறுத்ததாகும். கடந்த மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீடு சரிவைக் கண்டது. ஜனவரி மாதம் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் இருந்த ஏஐசிபிஐ புள்ளிகள், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. எனவே மே மற்றும் ஜூன் மாதங்களில், இந்த புள்ளிகளின் தரவு 127 ஐ கடந்தால் அகவிலைப்படி 4% அல்லது 5% வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!