IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!
IRCTC செயலி மூலம் ஆன்லைனில் ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் எண்ணிக்கை இப்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ரயில் முன்பதிவு
இந்திய மக்களால் அதிகளவு விரும்பப்படும் ஒரு பயணம் ரயில் போக்குவரத்து தான். மிக குறைந்த பயண செலவில் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு போதுமானதாக அமையும் இந்த ரயில் பயணங்கள் மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. இப்போது கொரோனா பரவல் காலத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து கணிசமாக குறைந்துள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவுகள் கூட இப்போது ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் IRCTC செயலி மூலம் ஆன்லைனில் ரயில் பயணத்திற்கு முன் பயணம் செய்யும் எண்ணிக்கை இப்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய ரயில்வேயில் ஒரு நபர் தனது ஆதார் அட்டையை இணைக்காமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த எண்ணிக்கை இப்போது இரு மடங்காக 12 என்ற எண்ணிக்கையில் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர ஆதார் அட்டையை IRCTC செயலியில் இணைத்துள்ள நபர்கள் அதிகபட்சமாக 12 என்ற எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கான IT வேலைவாய்ப்பு 2022 – முழு தகவல்களும் இதோ..!
இது தவிர ஆதார் அட்டையை இணைத்துள்ளவர்கள் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இப்போது இந்தியன் ரயில்வே வழங்கும் முன்பதிவு வசதிகளை பெற்றுக்கொள்ள சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களின் ஆதார் அட்டை IRCTC செயலியில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பயணத்தின் போது முன் பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவரது ஆதார் அட்டை பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.