TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள்!
காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணிக்கு மொத்தமாக 444 காலியிடங்கள் இருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல் பணி:
சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (Taluk & AR) பணிக்கு 444 காலியிடங்கள் இருப்பதால் அந்த காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) பணிக்கு 399 காலிப் பணியிடங்களும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணிக்கு 45 காலிப் பணியிடங்களும் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒவ்வொரு ரேஷன் கார்டு மீதும் தலா ரூ.3 லட்சம் கடன் – பட்ஜெட் அறிவிப்புகள்!
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகம் இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் இந்த பணியிடங்களுக்கு தகுதியாக முடியாது. விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர் tnusrbonline.org என்கிற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம். வயது 20 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முதலில், TN போலீஸ் SI தேர்விற்கு எழுத்து மூலமாக தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதன் பின்பு உடல் திறன் தேர்வு (PET) , உடல் அளவீட்டுத் தேர்வு (PMT) , சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு பிறகு Viva- Voce நடைபெறும். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, Viva-Voce மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு முலமாக பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் 044-40016200 மற்றும் 044-28413658 மற்றும் 94990 08445 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.