மதுரை மாவட்ட ஊராட்சி துறையில் வேலை – MS Office முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
மதுரை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் செயல்பட்டு வரும் அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மதுரை (TNSRLM, Madurai) |
பணியின் பெயர் | வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் காலிப்பணியிடங்கள்:
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- வட்டார இயக்க மேலாளர் – 01 பணியிடம்
- வட்டார ஒருங்கிணைப்பாளர் – 09 பணியிடங்கள்
அரசு பணிக்கான தகுதிகள்:
- அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் Bachelor’s Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer science பாடப்பிரிவில் Degree மற்றும் MS Office பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றவராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் உள்ளூரை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த திட்டம் சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 02 வருடங்கள் முதல் அதிகபட்சம் 03 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவராக விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
TNSRLM, Madurai தேர்வு முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
TNSRLM, Madurai விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.