தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு – 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்…!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Village Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 27.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்ட அறிவிப்பில் Village Assistant பணிக்கு என 5 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- Village Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
- Village Assistant பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TNRD Dindigul விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆட்சியரிடம் 27.04.2022 என்ற இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.