TNPSC 429 காலிப்பணியிடங்களுக்கு மாதிரி நேர்முகத்தேர்வு – வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய நெறி இயக்குனர் அவர்கள், TNPSC வேளாண் அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வில் தயாராகும் நபர்களுக்காக இலவச மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இலவச நேர்காணல்:
தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மையங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இளைஞர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசின் அறிவிப்பில் உள்ள காலியிடங்கள் அவர்களுக்கு பரிசீலிக்கப்படும். மேலும், அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் அதிக அளவிலானவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தருகிறது. தற்போது தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் ஒரு வாரத்திற்கு ரயில்கள் முன்பதிவு ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் அரசு பணியாளர் தேர்வாணையம் வேளாண் அலுவலர் பணி மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணிக்கான 429 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. அந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டது. அடுத்த கட்டமாக எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய நெறி இயக்குனர் செ.ரமேஷ்குமார் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதன்படி, வேளாண் அலுவலர் பணி மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணிக்கான இறுதி நேர்முகத் தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு உதவும் வகையில் நவம்பர் 17ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச மாதிரி நேர்காணல் நடக்க உள்ளது. இந்த மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்திற்கு நேரில் சென்று அல்லது 81109 19990 என்ற வாட்ஸ்அப் செயலியின் எண்ணிலோ தங்களது பெயர் மற்றும் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு பதிவு எண் போன்ற தகவல்களை கொடுத்து நவம்பர் 16ம் தேதியான நாளைக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.