சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழகத்தில் ஆபரண தங்கம் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 192 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு தங்க விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தங்க விலை நிலவரம்:
கொரோனா பரவலின் போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தினை கருதி அதில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்க விலை அதிரடியாக உயர்ந்தது. பின்னர் இயல்பு நிலை திரும்பியதும் தங்க விலை குறைந்தது தான் என்று கூறினாலும், அதிகரித்த அளவிற்கு குறையவில்லை. அதே போல் பண்டிகை நாட்களில் தங்கத்தின் விலை அதிகமாக தான் இருந்து வந்தது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொது மக்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.
TNPSC 429 காலிப்பணியிடங்களுக்கு மாதிரி நேர்முகத்தேர்வு – வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தீபாவளி பண்டிகை முடிந்தது. அப்போதும் கூட தங்க விலை உச்சத்திலேயே தான் இருந்து வந்தது. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று தங்க விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் தங்க நகைக்கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.
இன்று முதல் ஒரு வாரத்திற்கு ரயில்கள் முன்பதிவு ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இன்று தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.37,048 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு கிராம் ரூ.4,631 என்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது மட்டுமல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 71 ரூபாய் என்றும் ஒரு கிலோ வெள்ளி 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல நாட்களுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.