இன்று முதல் ஒரு வாரத்திற்கு ரயில்கள் முன்பதிவு ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 15ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை 6 மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் பரவி வந்த கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை உட்பட மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. மற்றவைகளை தொடர்ந்து முக்கிய ரயி சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் மக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். இத்தகைய சூழலில் பயணிகள் வருகை இல்லாததால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இதனால் ரயில்வே துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறையத் தொடங்கியதும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் ரயில்கள் மீதும் இயங்கத் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் சில முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இன்று முதல் 5 நாட்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நவம்பர் 20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை!
அதன்படி இன்று இரவு முதல் நவம்பர் 20ம் தேதி வரை இரவு 11.30 மணி முதல் வரை அதிகாலை 5.30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. அதனால் இந்த ஒரு வாரத்திற்கு ரயில் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் இரவு 11.30 மணிக்குள் செய்து முடிக்க தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.