தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை பெய்யும் காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் குறைந்த பிறகு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதன் முடிவுகளின் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் திறக்கப்பட்டது. அதன் பிறகு, தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பின், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வந்தது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

தமிழக சத்துணவு துறையில் உதவியாளர்‌ வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இதனால் கனமழை பெய்து வந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழையை தந்தது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தின் பலப் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து, அதிக பாதிப்புகளை உண்டாக்கியது. இதனால் தொடர்ந்து கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நவம்பர் 20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை!

தற்போது புதிதாக தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வரும் நவம்பர் 17ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!