TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் குரூப் 1,குரூப் 2, குரூப் 3 , குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தற்போது TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாய் கடந்த 2 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதால் சில போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 11 ஆம் தேதி தஞ்சாவூரில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் துறை பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு TNPSC குரூப் 2 தேர்வு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்திலும் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்தது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – விரைவில் பாடங்களை நடத்த உத்தரவு!
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு OTR என்ற ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு முறையின்படி இணையதளத்தில் பதிவு செய்த தேர்வர்கள் அதோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது குரூப் 2 தேர்வு எழுதும் தேர்வர்கள்களில் OTR வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மேலும் ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் (பிப்ரவரி 6) மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேப்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு OTR முறையின்படி இணையதளத்தில் பதிவு செய்த தேர்வர்கள் அத்துடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மேலும் இது குறித்து சந்தேகம் எதுவும் இருந்தால் [email protected] /[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.