நாளை மறுநாள் (பிப்ரவரி 6) மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
நாளை மறுநாள் (பிப்ரவரி 6) மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
நாளை மறுநாள் (பிப்ரவரி 6) மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
நாளை மறுநாள் (பிப்ரவரி 6) மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக வரும் பிப்ரவரி 6ம் தேதியன்று மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் அரசு சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

முழு ஊரடங்கு

கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் சரிவடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக பிப்ரவரி 6ம் தேதியன்றும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இப்போது ஜனவரி 23 மற்றும் ஜனவரி 30 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது இருந்த நடவடிக்கைகள் பிப்ரவரி 6ம் தேதியும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.

கோமாவில் இருந்து மீண்டு வந்த பாம்புபிடி மன்னன் ‘வாவா சுரேஷ்’ – மருத்துவர்கள் அறிக்கை!

அந்த வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழக்கமான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவசியமற்ற போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. தொடர்ந்து அவசர பயணங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டங்கள் தோறும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி 6ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது கேரளா மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி,

  • திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • அத்தியாவசிய பொருட்களான பால், செய்தித்தாள், மீன், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறி கடைகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறை, தீயணைப்பு துறை, பத்திரிகை, அரசு அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற அத்தியாவசிய துறைகளில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டையுடன் பயணிக்கலாம்.
  • மருத்துவக்கடைகள், பத்திரிகை நிறுவனங்கள், டெலிகாம், இணைய சேவைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் முழு நேரமும் செயல்படலாம்.
  • துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல செயல்படலாம்.
  • அவசர பயணத்திற்கு உரிய ஆவணங்களுடன் அனுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
  • திட்டமிடப்பட்ட தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் ID அல்லது ஹால் டிக்கெட்டுடன் பயணம் செய்யலாம்.
  • நீண்ட தூர பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும்.
  • விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம்.
  • முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
  • மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!