தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – விரைவில் பாடங்களை நடத்த உத்தரவு!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - விரைவில் பாடங்களை நடத்த உத்தரவு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - விரைவில் பாடங்களை நடத்த உத்தரவு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – விரைவில் பாடங்களை நடத்த உத்தரவு!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற உள்ள திருப்புதல் தேர்வுக்கு மாணவர்களை சிறப்பாக தயார் படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பள்ளி மாணவர்கள் தான். தொடர்ந்து விதிக்கப்படும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கடந்த வருடம் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய பொத்துத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நாளை மறுநாள் (பிப்ரவரி 6) மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் வரும் மே மாதம் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனால் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக உள்ளது. அதனால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Post office மாதம் ரூ.250 முதல் சிறப்பான சேமிப்பு திட்டங்கள் – குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!

மேலும் தற்போது நடைபெற உள்ள திருப்புதல் தேர்வுக்கு சிறந்த முறையில் மாணவர்களை தயார்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மாணவர்களின் விடைத்தாள்களை உரிய முறையில் பாதுகாக்கவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு பள்ளிகளில் வகுப்புகள் மற்றும் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!