TNPSC Group1 தேர்வர்கள் கவனத்திற்கு – பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்‌!

0
TNPSC Group1 தேர்வர்கள் கவனத்திற்கு - பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்‌!
TNPSC Group1 தேர்வர்கள் கவனத்திற்கு - பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்‌!
TNPSC Group1 தேர்வர்கள் கவனத்திற்கு – பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்‌!

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் I தேர்வு தொடர்பாக முகநூல் பக்கத்தில் தவறான செய்திகள் வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை பதிவு:

தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதல்நிலை,முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் இதற்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் முதல்நிலைத் தேர்வு கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு, பின் 2021-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் டிசம்பர் 14ம் தேதி வெளியாகின. அதன் பின்னர், இதில் முதன்மைத் தேர்வுக்கு 3,800 தேர்வு செய்யப்பட்டனர்.

Exams Daily Mobile App Download

முன்னதாக, இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்த முதன்மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நேற்று முன் தினம் வெளியிட்டது. அதில் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற 137 பேரின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. அடுத்ததாக நேர்முகத் தேர்வு சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த தேர்வு பட்டியல் தற்காலிகமானது என்றும் நேர்காணலின் போது, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் ஜூலை 10 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு – பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் !

இதற்கிடையே, குரூப் – I தேர்வு தொடர்பாக முகநூல் பக்கத்தில் தவறான செய்திகள் வெளியானது. இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ குரூப் 1-ல் அடங்கிய பதவிகளுக்காக 04.03.2022, 05.03.2022 மற்றும்‌ 06.03.2022 அன்று நடைபெற்ற முதன்மை தேர்வில்‌ தேர்ச்சி பெற்று, 13.07.2022 முதல்‌ 15.07.2022 வரை நடைபெற உள்ள நேர்முகத்‌ தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வாளர்கள் பட்டியல்‌ 29.06.2022 அன்று தேர்வாணைய வலைதளத்தில்‌ வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, முகநூல்‌ பக்கத்தில்‌ தேர்வாணையத்தின்‌ செயல்பாடுகளுக்கு அவதூறு ஏற்படுத்தும்‌ வகையில்‌ பொய்யான தகவல்கள்‌ பதிவிடப்பட்டுள்ளது. இதை செய்த நபர்‌ மீது பொய்யான தகவலை பதிவிட்டமைக்காக சைபர்‌ கிரைமில்‌ தேர்வாணையத்தால்‌ புகார்‌ அளிக்கப்பட்டுள்ளது எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்களை தேர்வர்கள்‌ நம்ப வேண்டாம்‌ என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!