TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – உடனே விண்ணப்பிக்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – IV விற்குரிய அறிவிப்பை ஜனவரி மாத இறுதியில் வெளியானது. இங்கு மொத்தம் 6244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வு:
- குரூப் 4 பணிக்கு மொத்தமாக 6244 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Steno-Typist (Grade – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 42 (பிரிவுகளுக்கு ஏற்ப) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.
- விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் TNPSC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் 28.02.2024 வரை. விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.