TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. மேலும் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் தேர்வர்களுக்கு எழுந்துள்ளது.
TNPSC Group 4:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுவாரியம் (TNPSC) மூலம் குரூப் 4 பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 6,244 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 30.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இப்பதவிகளுக்கு 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 42 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
குரூப் 4 பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கு பொருத்தமான நபர்கள் 09.06.2024 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் இன்று (28.02.2024) இரவு 11.59 மணியளவில் முடிவடைய உள்ளது. எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 150/- பதிவு கட்டணத்தையும், ரூ.100/- தேர்வு கட்டணத்தையும் உடனே செலுத்தி https://tnpsc.gov.in/ என்ற வலைதள பக்கத்தில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பதிவிகளுக்கு முன்பு கூறப்பட்டதை விட குறைந்த பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.