TNPSC Group 4 தேர்வு மையம் மாற்றம் – ஆட்சியர் திடீர் அறிவிப்பு! கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருந்த குரூப் – 4 தேர்வு நிலமங்கலம் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேர்வு மையம் மாற்றம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்களுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான ஹால்டிக்கெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. TNPSC Group 4 தேர்வுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி சமீபத்தில் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும், வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைப்பதற்கான சூழல் இல்லாத காரணத்தினால், அங்கு அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாற்றியுள்ளது. இதுதொடர்பாக TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்வாக காரணங்களினால், கள்ளக்குறிச்சி நீலமங்களம் ஏ.கே.டி அகாடெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏ.கே.டி. மெமோரியல் வித்யா சாகெத் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி விண்ணப்பதாரர்களுக்கு மாற்று ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விவரம் தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் – IV தேர்வு எழுத வரும் தேர்வர்களின் முக்கிய கவனத்திற்கு:
- தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு வந்துவிட வேண்டும்.
- தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 9.00 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வுக்கூடத்திற்குள் கைப்பேசி மற்றும் எந்த வகையான மின்னனு சாதனங்களையும் கொண்டு வர அனுமதியில்லை.
ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
- தேர்வு எழுத வரும் நபர்கள் கருப்பு பந்துமுனைப் பேனாவினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
- தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு மைய அனுமதிச் சீட்டினை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
- தேர்வு எழுத வரும் நபர்கள் அரசின் அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.