ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் வரும் ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளி விடுமுறை
கொரோனா பாதிப்புகளின் திடீர் அதிகரிப்பு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூலை 24ம் தேதி வரை திறக்கப்படாது என்று மணிப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது, அம்மாநிலத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வி ஆணையர் எச் ஞான் பிரகாஷ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், ‘மாநிலத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் பொது நலன் கருதி ஜூலை 24 வரை மூடப்படும்’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூலை 16ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கொரோனா நேர்மறை வழக்குகள் அதிகரித்து வருவதால், மணிப்பூர் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளையும் இம்மாதம் 24 ஆம் தேதி வரை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் ஜூலை 26 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், ‘மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மணிப்பூர் அரசு, அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 24ம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது மணிப்பூரில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதால், அந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் ஆலோசிக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.