TNPSC குரூப் I & குரூப் II தேர்வர்கள் கவனத்திற்கு – ஜனவரி 10ம் தேதி வகுப்புகள் தொடக்கம்! இணையவழி முன்பதிவு!

0
TNPSC குரூப் I & குரூப் II தேர்வர்கள் கவனத்திற்கு - ஜனவரி 10ம் தேதி வகுப்புகள் தொடக்கம்! இணையவழி முன்பதிவு!
TNPSC குரூப் I & குரூப் II தேர்வர்கள் கவனத்திற்கு - ஜனவரி 10ம் தேதி வகுப்புகள் தொடக்கம்! இணையவழி முன்பதிவு!
TNPSC குரூப் I & குரூப் II தேர்வர்கள் கவனத்திற்கு – ஜனவரி 10ம் தேதி வகுப்புகள் தொடக்கம்! இணையவழி முன்பதிவு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்துவதற்கான திட்டமிடல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் TNPSC குரூப் I & குரூப் II தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC பயிற்சி வகுப்புகள்:

தமிழக அரசின் பணியாளர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 ஆகிய தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்கிறது. இதன் மூலம் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் அரசு பணிக்கு தயாராகும் நபர்கள் TNPSC தேர்வுக்கான அறிவிப்புகளை கவனமாக பின்பற்றி வருகின்றனர். 2020ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் பாதிப்புகள் காரணமாக TNPSC தேர்வுகள் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

தமிழக வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை – பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கடந்த ஆண்டு இறுதியில் TNPSC தேர்வுகள் நடத்துவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த 3 அரசுத்தேர்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட உள்ளது. சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தற்போது SSC தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் இணையவழியாக நடைபெற்று வருகின்றது. இதேபோல், குரூப் I & குரூப் II தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு!

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் திரு.K.வீரராகவ ராவ் அவர்கள் அரசு தேர்வுக்கு தயாராகும் நபர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!