TNPSC குரூப் 1, 2 & 4 VAO தேர்வு அறிவிப்பு 2021 – அக்.27ம் தேதி தேர்வாணைய குழு கூட்டம்!
சென்னையில் வரும் அக்டோபர் 27ம் தேதியன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தின் குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதற்கு பின்பாக குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
TNPSC தேர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கமாக நடத்தப்படும் TNPSC தேர்வு கால அட்டவணையின் படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்புகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் எனவும் தேர்வாணையம் தகவல் அளித்திருந்தது.
திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு – 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது!
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணத்தின் (TNPSC) குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் சென்னையில் வரும் 27ம் தேதி நடக்க இருப்பதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் 27ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் அலுவலகத்தில் வைத்து தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
இந்த ஆலோசனை கூட்டத்தில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வு ஆகிய தேர்வுகளை எந்த தேதிகளில் நடத்தலாம் என்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிட பட்டியலை அனுப்பி வைக்கும்படி TNPSC ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளை நடத்தும் தேதி குறித்து TNPSC தேர்வுகள் நடைபெறும் என தெரிகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, TNPSC தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பாக அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் தேர்வர்கள் தமிழ் மொழித்தாள் தேர்வில் 45 மதிப்பெண்களை பெற்றிருக்கும் பட்சத்தில் மீதமிருக்கும் விடைத்தாள்களை திருத்தவும் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.