தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் துறைவாரியாக பேச்சுவார்த்தை நடத்திய பிற்பாடு அரசுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு நிறுவனங்களில், அதன் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போல மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ரயில்வே துறை ஊழியர்களுக்கும் போனஸ் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்நிலையில் தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் அரசுக்கு அதிக லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 20% போனஸ் தொகையும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10% போனஸ் தொகையும் வழங்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு அரசுத் துறை ஊழியர்களுக்கு 25% தீபாவளி போனஸ் தொகையை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் தற்போது நிலவி வரும் நிதி நிலைமைக்கு ஏற்றபடி ஒவ்வொரு அரசுத் துறையிலும் உள்ள அமைச்சர்கள் தீபாவளி போனஸ் தொடர்பாக முதல்வருடன் பேச உள்ளனர். இதை தொடர்ந்து தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.