திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு – 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது!

0
திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு - 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது!
திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு - 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது!
திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு – 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்து வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளது.

சிறப்பு தரிசனம்:

திருப்பதி கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் உலகின் பல பகுதியிலிருந்தும் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவார்கள். இதற்காக விவிஐபி தரிசனம், விஐபி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் தரிசனத்திற்கு வழிபாட்டு தலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் தேவஸ்தானத்தின் இணையதளத்தின் மூலம் முன்னதாக வெளியிடப்படும். இந்நிலையில் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் நேற்று காலை 9 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

டிக்கெட் வெளியிடப்பட்ட 3 மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது. 7.08 லட்சம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதால் 21 கோடி ரூபாய் பணம் வசூலாகியுள்ளது. நேற்று முன்தினம் 27,473 பேர் கோயிலில் தரிசன செய்துள்ளனர். இதனால் உண்டியலில் 3.18 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. முன்பதிவு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!