TNPSC விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு – உடனே கவனிங்க!

0
TNPSC விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு - உடனே கவனிங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது நிர்வாக அதிகாரி கிரேடு  1 பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அறிக்கை வெளியீடு:

TNPSC தேர்வு வாரியம் ஆனது நிர்வாக அதிகாரி கிரேடு 1 பணிகளுக்கான ஆட்சேர்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப் படிப்பை கல்வி தகுதியாக கொண்ட இப்பணிக்கு மாதம் ரூ.37,700 முதல் ரூ. 1,19,500 வரை ஊதியமாக வழங்கப்படும். எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு என்ற இரண்டு நிலை தேர்வுகளில் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் ஆனது தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தொகுதி -VII A  பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை ஒன்று பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதரர்களுக்கு 4% DA உயர்வு – அரசு அறிவிப்பு!

எனவே இத்தகைய விண்ணப்பதாரர்கள் மார்ச் 15ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் விடுபட்ட அல்லது முழுமையான சான்றிதழ்களை OTR வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு முழுமை அடையாத பட்சத்தில் இத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!