TNPSC குரூப் 2, 2A வயது வரம்பு அதிகரிப்பு, தேர்வு நேரம் மாற்றம் – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.தேர்வு நேரம் மாற்றம், வயது வரம்பு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
குரூப் 2,2A :
தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக எந்த போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தாண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு ஷாக் – பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்வு?
அதில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பை இன்று தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ஆம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மே 21ம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய மாற்றங்களாக TNPSC தேர்வில் தமிழ் மொழி தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குருப் 2 தேர்வை எழுத விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் குரூப் 2 தேர்வின் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதியாக தட்டச்சு முடித்திருக்க வேண்டும். முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுக்கு வயது வரம்பாக பொதுபிரிவினருக்கு 20 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. இந்த ஆண்டு முதல் தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.30க்கு தேர்வு முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்பகல் தேர்வு வழக்கம்போல 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறவுள்ளது.