வாகன ஓட்டிகளுக்கு ஷாக் – பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்வு?
உக்ரைன்- ரஷியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் நெருங்கும் நிலையில் உள்ளது. அதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
உக்ரைன்- ரஷியா இடையே பல்வேறு பிரச்சனை காரணமாக போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ரஷியாவில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அதிபருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனால் உக்ரைனுக்கு அருகில் உள்ள பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷியாவின் போர் படைகள் குவிந்துள்ளன. மேலும் உக்ரைன் எல்லையிலிருந்து 20 கி.மீ தொலைவில் ரஷியாவின் படைகள் முகாமிட்டு உள்ளதால் போர் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு!
அத்துடன் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என்று தெரிவித்தால் போர் புரிய அவசியம் இல்லை என்றும் ரஷியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய நாட்டிற்கு ரஷியாவில் இருந்து தான் இயற்கை எரிவாயு உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றனர். அதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் நெருங்கி உள்ளது. இதற்கு முன்னதாக கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ம் ஆண்டு அதிகரித்தது. 2014ம் ஆண்டு தான் ரஷியா படைகள் உக்ரைன் வசம் இருந்த கிரைமியா பகுதியை பிரிவினைவாதிகளை கொண்டு கைப்பற்றியது.
இதையடுத்து உக்ரைன் மற்றும் ரஷியா பகுதியில் ஏற்பட்ட போர் அபாயம் காரணமாக தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்படாத நிலை உள்ளது. தற்போது நாட்டில் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்தலுக்கு பின் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று கூறப்படுகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு விலை லிட்டருக்கு 8 ரூபாய் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.