TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று ஒரு முக்கிய செய்தி குறிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பை கீழே விவரமாக பார்ப்போம்.
TNPSC செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைத்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப் 2 தேர்வுகளுக்கான நாட்களை அறிவித்து இருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒரு தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2 தேர்வு அறிவிப்பு சென்ற மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது.
மத்திய ஜவுளித் துறையில் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 01/2022, நாள் 21.01.2022-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு செய்யப்பட்ட தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 23.04.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 24.04.2022 (முற்பகல் மட்டும்) நடைபெற உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஏப்ரல் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்!
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket)தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.