TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வெழுத விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப TNPSC மூலமாக நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC வெளியிட்டுள்ளது.
TNPSC அறிவிப்பு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்னரை ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கு பின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மக்களிடம் தங்கத்தை கடனாக கேட்கும் பாகிஸ்தான் அரசு – அந்நிய செலாவணி 17 பில்லியன் டாலர் சரிவு!
அதன் படி இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டது. மேலும் 5831 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு மற்றும் அதன் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 2 தேர்வை எழுத விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களது வயது வரம்பு 30 க்கு மிகாமல் இருக்க வேண்டும் இது பொது பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. மேலும் TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க பிப்.28 கடைசி நாள்!
இந்நிலையில் TNPSC சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி TNPSC @ 60600TLITE 60 OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைத்து OTR கணக்கு மூலமாகவே நாளை மறுநாள் ( பிப் .23 ம் தேதி ) முதல் குரூப் 2 , குரூ 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.