அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க பிப்.28 கடைசி நாள்!
ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் உங்களின் மாதாந்திர ஓய்வூதியம் நின்று விடும்.
ஆயுள் சான்றிதழ்:
இந்தியாவில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் வகையில் அரசு சார்பாக மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களது வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் நபர் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
பிப்.28 முதல் பள்ளிகள் மீண்டும் முழுமையாக திறப்பு – அரசு அனுமதி!
கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா அச்சத்தால் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் வெளியில் செல்வதில் பல சிக்கலை எதிர்கொண்டனர் இந்த நிலையில் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்காக பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பிப்ரவரி 28ம் தேதிக்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஓய்வூதியதாரர்கள் விரைந்து ஆயுள் சான்றிதழை சமர்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்பிக்கா விட்டால் அவர்களின் பென்ஷன் தொகை நின்றுவிடும்.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தற்போது டிஜிட்டல் முறையில் எளிதாக வீட்டிலிருந்தபடியே ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். அதன்படி https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஸ்மார்ட்போன் மூலம் மின்னஞ்சல் ஐடி உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து கைரேகை சாதனம் மூலம் சமர்ப்பிக்கலாம்.வங்கிக் கிளைக்கு நேரடியாகச் செல்ல முடியாதவர்கள் 12 பொதுத்துறை வங்கிகளின் வங்கிகளின் டோர் ஸ்டெப் சேவை மூலமாக சமர்ப்பிக்கலாம்.