பிப்.28 முதல் பள்ளிகள் மீண்டும் முழுமையாக திறப்பு – அரசு அனுமதி!
கொரோனா புதிய பாதிப்புகளின் குறிப்பிடத்தக்க சரிவுக்கு மத்தியில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பள்ளிகள் இந்த மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பல மாநிலங்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் தினசரி கொரோனா பாதிப்புகளின் குறிப்பிடத்தக்க சரிவுக்கு மத்தியில், பிப்ரவரி 28 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்கவும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 7 நாட்கள் வரை காத்திருப்பு!
இப்போது ஜம்மு காஷ்மீரின் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உள்ளரங்க கூட்டங்களில் கலந்து கொள்ள 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், சினிமா அரங்குகள், திரையரங்குகள், உணவகங்கள், கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அங்கீகரிக்கப்பட்ட திறனில் 25 சதவிகிதம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அரசு உத்தரவில், ’15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டுதல்கள், சமூக விலகல் மற்றும் கொரோனா பொருத்தமான நடத்தை ஆகியவை கண்டிப்பாக பின்பற்றப்படுவதை நிறுவனங்களின் தலைவர் உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசின் புதிய உத்தரவின் படி, பள்ளி வளாகத்தில் அறிகுறியுள்ள மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.