தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அன்று அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. அதனால் பள்ளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி அன்று நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி கடந்த 19ம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்பட்டது.
TNPSC குரூப் 2, 2A காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – தேதி மாற்றம்? முக்கிய கோரிக்கை!
மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணப்படும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அறிவிக்கப்படும். இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்தது மற்றும் கள்ள ஓட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததால் சென்னை, மதுரை, திருவண்ணாமலை, அரியலூர், மாவட்டங்களில் உள்ள வாக்கு சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த 2 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
அதன்படி சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள வார்டு 51க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 5,059 உள்ளிட்ட பகுதிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனால் அங்கு அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில் உள்ள சென்னை உருது பள்ளி மற்றும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.