மக்களிடம் தங்கத்தை கடனாக கேட்கும் பாகிஸ்தான் அரசு – அந்நிய செலாவணி 17 பில்லியன் டாலர் சரிவு!

0
மக்களிடம் தங்கத்தை கடனாக கேட்கும் பாகிஸ்தான் அரசு - அந்நிய செலாவணி 17 பில்லியன் டாலர் சரிவு!
மக்களிடம் தங்கத்தை கடனாக கேட்கும் பாகிஸ்தான் அரசு - அந்நிய செலாவணி 17 பில்லியன் டாலர் சரிவு!
மக்களிடம் தங்கத்தை கடனாக கேட்கும் பாகிஸ்தான் அரசு – அந்நிய செலாவணி 17 பில்லியன் டாலர் சரிவு!

உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். இதில் குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு மக்களிடம் கடன் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

நிதி நெருக்கடி:

சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பெரும் உயிர் சேதமும், பொருளாதார நெருக்கடி நிலையும் உருவாக்கியது. அத்துடன் கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் வேறு வகையில் உருமாற்றம் அடைந்து இரண்டு மடங்கு வேகமாக பரவ தொடங்கிறது. அதனால் இந்த தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது உலக நாடுகளுக்கு சவாலாக உள்ளது. அதன் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.

பிப்.28 முதல் பள்ளிகள் மீண்டும் முழுமையாக திறப்பு – அரசு அனுமதி!

இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையையும் வேலையையும் இழந்துள்ளார்கள். அதனால் அரசுக்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலை உருவாகிறது. இதில் சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பல்வேறு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி நிலை இருந்தது. தற்போது கொரோனா பரவலுக்கு பிறகு நிதி நெருக்கடி மேலும அதிகரித்துள்ளது. அத்துடன் இங்கு பெட்ரோல் மற்றும் மின்சார கட்டணமும் உயர்ந்துள்ளது.

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க பிப்.28 கடைசி நாள்!

இவ்வாறு தொடர்ந்து நிதி நெருக்கடி உள்ள நிலையில் இந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 17 பில்லியன் டாலர் சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனால் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் பொருளாதார முதன்மை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இது குறித்து அந்நாட்டு நிதி அமைச்சர் கூறியதாவது, வர்த்தக வங்கி மூலமாக மக்களிடம் இருந்து தங்கத்தை முதலீடுகளை பெற உள்ளதாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!