TNPSC 2021 குரூப் 1, 2 & 4 VAO தேர்வுகள் – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1, 2 & 4 VAO தேர்வுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தேர்வு அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC அறிவிப்பு:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் அரசு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அக்டோபர் மாதம் நடப்பாண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி வாரியம் குரூப் 2, குரூப் 1, குரூப் 4 போன்ற தேர்வுகளை பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி முக்கிய அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் முன்னதாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள் கடந்த மாதம் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
6 முதல் 8ம் வகுப்பு வரை தீபாவளிக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு திட்டம்!
TNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத்தகுதி நிபந்தனை, வயது வரம்பு சலுகை இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும். மேலும், பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 3% உயர்வு – ஜூலை 1 முதல் அமல்!
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் அக்டோபர் 27ம் தேதியான இன்று நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் குரூப் 2, குரூப்-1, குரூப்-4 VAO ஆகிய தேர்வுகளை நடத்தும் தேதிகளை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் தேர்வுகளின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.