6 முதல் 8ம் வகுப்பு வரை தீபாவளிக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு திட்டம்!
வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலம் முடிவடைந்த பிறகு டெல்லியில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
டெல்லியில் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்து வந்ததையடுத்து மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் கடந்த மாதம் முதல் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மீண்டுமாக துவங்கப்பட்டது. இதையடுத்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது. மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 3% உயர்வு – ஜூலை 1 முதல் அமல்!
இதனை கருத்தில் கொண்டு 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டுமாக திறக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) பரிந்துரைத்துள்ளது. இது குறித்த இறுதி முடிவுகள் தீபாவளி பண்டிகைக்கு பிறகுதான் அறிவிக்கப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற DDMA கூட்டத்தில், தற்சமயம் திறக்கப்பட்டுள்ள வகுப்புகளில் மாணவர்களின் வருகை எவ்வாறு அதிகரித்தது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று & அக்.30 இம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மேலும் சுமார் 95% பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நேரடி வகுப்புகளில் 80% மாணவர்கள் வரை கலந்து கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் விரைவில் மீண்டும் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்படாது. மேலும் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மீண்டும் தொடங்கும் பட்சத்தில் 50% இருக்கை திறனுடன் இவை அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.