புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 3% உயர்வு – ஜூலை 1 முதல் அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வானது நடைமுறைப்படுத்தப்படும். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் DA 11% உயர்த்தப்பட்டு 28% அகவிலைப்படி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு தற்போது நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு ஜூலை மாதம் முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று & அக்.30 இம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தீபாவளி பண்டிகை நேரத்தில் இத்தகைய நடவடிக்கை மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. மத்திய அரசை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் தங்களது அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 28% அளிக்கப்பட்டு வந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 3% உயர்த்தப்பட்டதால் தற்போது 31% வழங்கப்பட உள்ளது. இந்த உயர்வானது ஜூலை மாதம் 1ம் தேதியை முன்தேதியிட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் குழந்தைக்கு நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்!
இதன் மூலம் 20 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்றும் மாதத்திற்கு 3.2 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் பணிபுரியும் தற்காலிக அரசு பணியாளர்கள் இதுவரை 7 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர். அவர்களுக்கு 15 ஆயிரமாக ஊதிய உயர்வு அளித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி நேரத்தில் இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் அரசு ஊழியர்களுக்கு இந்த தீபாவளி மிகச் சிறந்த முறையில் அமையும் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.