TNHRCEயில் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் வேலை – தேர்வு கிடையாது!
விருதுநகர் மாவட்ட, இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE Viruthunagar) கீழ் இயங்கி வரும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், நாதஸ்வரம் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.09.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், நாதஸ்வரம் |
பணியிடங்கள் | 57 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
இளநிலை உதவியாளர் (2), வழக்கு எழுத்தர் (1), வசூல் எழுத்தர் (1), சீட்டு விற்பனையாளர் (1), அலுவலக உதவியாளர் (1), உபகாவல் (12), துப்புரவாளர் (27), மேளம் செட் (1), நந்தவனம் (1), உபகோவில் பாரா (1), பண்டக காப்பாளர் (1), மேற்பார்வையாளர் (1), ஓதுவார் (1), நாதஸ்வரம் (1), திருவிளக்கு (1), உதவி சுயம்பாகம் (1), வரைவாளர் (1), பிளம்பர் (1), உதவி மின் பணியாளர் (1) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 57 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அறநிலையத்துறை கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு
இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், பண்டக காப்பாளர் – 10ஆம் வகுப்பு
பிளம்பர், உதவி மின் பணியாளர் – ITI
வரைவளர் – BE / B.Tech
மற்ற பணிகளுக்கு – தமிழில் எழுத / படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:
இந்த அறநிலையத்துறை பணிக்கு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் செய்முறை தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை இந்த அறநிலை துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
TNHRCE இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 05.09.2022 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
தபால் செய்ய வேண்டிய முகவரி;
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
இருக்கண்குடி, சாத்தூர் வட்டம்,
விருதுநகர் – 626 202.
Download Notification & Application Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்