ரூ.50,000/- ஊதியத்தில் அறநிலையத்துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Office Assistant, Night Watchman பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 09 இடமும், Night Watchman பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Office Assistant, Night Watchman பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2021 அன்றைய நாளின்படி குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நிலை 1 ஊதிய அளவின்படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.