தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தற்போது வீடுகளில் மின் ஊழியர்கள் மின் பயன்பாட்டை கணக்கெடுத்த தேதியில் இருந்து 20 நாட்களுக்கு பின் மின் கட்டணம் செலுத்த வேண்டும். 20 நாட்கள் தாண்டியும் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு மின் விநியோகத்தை நிறுத்துமாறு பொறியாளர்களுக்கு தமிழக மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள், தியேட்டர்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் தமிழக மின்சார வாரியம் மின் விநியோகத்தை வழங்கி வருகிறது. இதற்கான மின் கட்டணம் மின் ஊழியர்களால் வீடுகளுக்கு சென்று கணக்கிடப்படுகிறது. இதற்கான கட்டணத்தை மின் ஊழியர்கள் மின் பயன்பாட்டை கணக்கிட தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் அபாரத்துடன் மின் கட்டணத்தை செலுத்திட வேண்டும். அதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்! முதல்வர் உத்தரவு!

மேலும் கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல், மே மாதங்களில் முழு ஊரடங்கு விதிமுறையை அரசு அறிவித்தது. மேலும் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்குள்ளே இருக்கும்படி அரசு கேட்டுக்கொண்டது. இதனால் அந்த மாதங்களுக்கான மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அனுமதிக்கப்பட்டன. மேலும் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரே தவணையில் பொருட்கள் வழங்கல்!

தற்போது மின் வாரியத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மின் கணக்கிட தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகளில் மின் இணைப்பை துண்டிக்குமாறு மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாத 87 ஆயிரம் மின் இணைப்புகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின் இணைப்புகள் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மின் வாரியத்திற்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக முறையாக ஆய்வு செய்து அந்த மின் இணைப்பு கணக்குகளை முடிக்குமாறு மின்வாரியம் உத்தரவு விட்டுள்ளது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!