முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்! முதல்வர் உத்தரவு!

0
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்! முதல்வர் உத்தரவு!
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்! முதல்வர் உத்தரவு!
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்! முதல்வர் உத்தரவு!

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான நிலையில் இது குறித்து மத்திய அமைச்சரவையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் மலைப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் வெலிங்டன் பயிற்சி கல்லூரிக்கு அருகில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று தற்போது விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த விபத்தில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரே தவணையில் பொருட்கள் வழங்கல்!

இவர்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த மற்றவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூர் பகுதிக்கு விரைந்துள்ளது. இந்த குழுவில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தலைமைத் தளபதியின் நிலை குறித்த எவ்வித தகவல்களும் வெளிவராத இந்த இக்கட்டான சூழலில் நீலகிரியில் நடைபெற்ற விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் விபத்து குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.

ஜியோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நீலகிரிக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து நீலகிரி ஆட்சியரை தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மீட்பு பணி குறித்தும், விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!