ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரே தவணையில் பொருட்கள் வழங்கல்!
இந்தியாவில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டது. குறிப்பாக உணவு பற்றாக்குறையை போக்க ரேஷன் கடைகள் மூலம் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்கியது.
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!
மாநில அரசை தொடர்ந்து மத்திய அரசு பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் மே மாதம் முதல் ஜூலை வரை தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் 80.89 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்தனர். அதன் பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்தது. அதனால் மத்திய அரசின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் தொடர்ந்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது அடுத்த தாக்குதலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது.
ஜியோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
அதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று மேலும் தீவிரமெடுத்தால் இந்தியாவில் முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.