தமிழக மின்வாரிய கேங்மேன்களுக்கு சொந்த ஊர்களில் பணி – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசுக்கு கோரிக்கை:
மின்வாரிய கேங்மேன்களுக்கு சொந்த ஊர்களில் பணி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கேங்மேன் பணிக்கு எழுத்து மற்றும் உடல் தகுதித்தேர்வில் 14,956 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களின் பணி நியமனம் பல்வேறு வழக்குகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 9613 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அனைவர்க்கும் வீடு திட்டம் மானியம் வழங்கல் – அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு!!
அவர்களின் 8500 பேர் பணி ஏற்பு செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களில் இல்லாமல் 300 முதல் 400 கி.மீ தொலைவில் உள்ள மாவட்டங்களில் பணியில் உள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது. அதில், அவர்களின் புதிய இடத்திற்கான தங்கும் இடம் மற்றும் உணவு போன்றவற்றிற்காக பெரும் தொகை செலவு ஆகின்றது. இதனால் இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
புதிய இடங்களில் பணி நியமனம் காரணமாக பல தொழிலார்கள் விபத்துகளில் சிக்கியுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மின்சாரம் என்பது அடிப்படை தேவை என்பதால், இரவு பகலாக உழைக்கும் கேங்மேன் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றித்தர வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்