தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி, ரூ.7709 உதவித்தொகை – அக்.29 நேர்காணல்!

0
தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி, ரூ.7709 உதவித்தொகை - அக்.29 நேர்காணல்!
தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி, ரூ.7709 உதவித்தொகை - அக்.29 நேர்காணல்!
தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி, ரூ.7709 உதவித்தொகை – அக்.29 நேர்காணல்!

தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படும்.

தொழில் பழகுநர் பயிற்சி:

தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக மிக சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அரசு நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டு தொற்றை குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு மக்கள் செல்லும் நேரத்தில் அடுத்த தாக்குதலாக இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் வேலை கிடைப்பது மக்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசிகள் பயன்பட்டால் தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அந்த வகையில் மின் வாரியம் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மண்டல வாரியாக உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை தலைமையகத்திற்கு அனுப்ப அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் வழங்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. ஐஐடி கல்வித்தகுதி உடையவர்களுக்கு ஈரோடு மாவட்ட மின் உற்பத்தி வட்டத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி ஆணையர் உரை!

இதில் இதற்கான நேர்காணல் அக்டோபர் 29ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மின் உற்பத்தி வட்டம், ஊராட்சிக் கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலில் பொருத்துநர் – 20 பேர், மின்னாளர் – 20, வெல்டர் – 20, வயர் மேன் – 10, கணினி இயக்குபவர் – 5 என மொத்தம் 65 பேர் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேர்காணலுக்கு செல்வோர் கல்வித்தகுதி சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும். தொழில் பழகுநர் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகையாக 7,709 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!