தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி ஆணையர் உரை!
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் அடிப்படையில் சிறப்பு ஊதியத்தில் பி.எட் பட்டதாரிகளை நியமிக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி:
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை முடிவடைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்-1 ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தொடக்க பள்ளிகளை வரும் நவ – 1 ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதில் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் துறை இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் போன்ற அமைப்புகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு, குஷியில் குழந்தைகள் – முன்னேற்பாடுகள் தீவிரம்!
மேலும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இன்னும் சில நாட்களில் தொடக்கப்பள்ளிகள் திறக்க இருக்கிறது. அதனால் வகுப்பறைகள் அமைத்தல் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்கீடு இல்லாமல் சிற்றுண்டி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை பள்ளிக்கல்வி இயக்குநர் முன் வைத்தனர். மேலும் தன்னார்வலர்களின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பி.எட் படித்த பட்டதாரிகளை சிறப்பூதியத்தின் அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது 2 வருடங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கவிருப்பதால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பாதுகாப்பு வழிகளை பலப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீடு தேடி வரும் புதிய சேவை திட்டம்! முழு விபரம் இதோ!
அதனை தொடர்ந்து பூஜ்ஜிய கலந்தாய்வை ரத்து செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர் உரையாடிய பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மாணவர்கள் 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிக்கு வருகைதர இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கல்வி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருப்பார்கள். அதனால் அவர்களை முதலில் உளவியல் ரீதியாக சரி செய்த பின்னர் பாடம் நடத்த தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களது கற்றலை சரிசெய்யும் விதமாக தான் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரிபவர்கள் அவர்கள் விருப்பப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு விருப்ப மாறுதல் பெற்றுக்கொள்ளலாம். கட்டாயம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இத்தகைய பேச்சு ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.